images 7 2
செய்திகள்இலங்கை

புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வீடுகள்: பாதுகாப்பு அமைச்சின் அதிரடி அறிவிப்பு!

Share

அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) புயல் காரணமாக முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக இது குறித்துத் தெரிவிக்கையில், வீடுகளை இழந்த குடும்பங்களுக்காகப் புதிய வீடுகளைக் கட்டும் பணிகள் இந்த வாரத்திலேயே உத்தியோகபூர்வமாகத் தொடங்குகின்றன.

இதற்கான நிதி ஒதுக்கீடு, தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் ஆளணி உதவிகள் தொடர்பான அனைத்துத் தேவையான அறிவுறுத்தல்களும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன.

புயல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூ. 25,000 அவசர உதவித்தொகை வழங்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதமானோருக்கு ஏற்கனவே இந்த நிதி வழங்கப்பட்டுவிட்டது. விடுபட்ட ஏனைய பயனாளிகளுக்கும் இந்த வார இறுதிக்குள் நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், முப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...