images 8 1
செய்திகள்இலங்கை

வீதி விளக்குகளுக்கும் மக்களே பணம் கட்ட வேண்டுமா? – புதிய மின்சாரக் கொள்கையில் சர்ச்சைத் திட்டம்!

Share

உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, வீதி விளக்குகளுக்கான செலவை அந்தந்தப் பகுதி மக்களிடமே அறவிடுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கம் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

மின் பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக இது குறித்து விளக்குகையில், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளின் மொத்த மின் நுகர்வு (Wattage) கணக்கிடப்பட்டு, அந்தத் தொகை அப்பகுதியில் வசிக்கும் மக்களின் மின்சாரப் பட்டியலுடன் (Bill) இணைக்கப்படும்.

இவ்வாறு அறவிடப்படும் தொகையானது, ஒரு பாவனையாளரின் மொத்த மின்சாரக் கட்டணப் பெறுமதியில் 2.2 சதவீதத்திற்கு (2.2%) மிகாதவாறு இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது வீதி விளக்குகளைப் பராமரிக்கும் பொறுப்பு பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளிடமே உள்ளது. எனினும், புதிய கொள்கையின்படி உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து இந்த அதிகாரம் பறிக்கப்படும், வீதி விளக்குகளை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் தனியானதொரு புதிய நிறுவனம் உருவாக்கப்படும்.

ஏற்கனவே மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, வீதி விளக்குகளுக்கான மேலதிக சுமையைச் சுமத்துவது அநீதியானது என மின் பாவனையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்தே இச்செலவுகள் ஈடுசெய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...