ranilkb
செய்திகள்அரசியல்இலங்கை

ரணிலின் மனு மீதான விசாரணை ஜனவரி 28இல்!!!

Share

அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யும் எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிய மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு நிஸங்க பந்துல கருணாரத்ன, தேவிகா அம்பரத்ன மற்றும் டி.எம்.சமரக்கோன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை, பரிந்துரைகளை வலிவிழக்கச் செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆணைக்குழு தனது விசாரணைகளை மேற்கொண்ட விதம் முற்றிலும் சட்டவிரோதமானது என மனுவில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு செய்த முறைப்பாடுகளுக்கு தாம் பொறுப்புக்கூற வேண்டும் என ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமையை ரணில் விக்ரமசிங்க உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆணைக்குழுவில் ஆஜராகி விடயங்களை தௌிவுபடுத்துவதற்கு போதுமான கால அவகாசம் வழங்காமையானது, நாட்டின் சட்டத்திற்கு மாத்திரமின்றி தர்மத்திற்கும் முரணான செயல் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...