sajith 3
செய்திகள்அரசியல்இலங்கை

ராஜபக்ச அரசை விரட்டியடிக்க அணிதிரளுங்கள்! – சஜித் அறைகூவல்

Share

பல எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே குடும்ப ஆட்சியில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த ராஜபக்ச அரசை விரட்டியடிக்கவேண்டும்.

இதற்காக அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் என நட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ச அரசின் சர்வாதிகார ஆட்சியால் மக்கள் வறுமையின் கோரத்தாண்டவத்தின் பிடியில் சிக்கித்தவிர்க்கின்றனர். எண்ணிலடங்காத சொல்லெணாத்துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக்கொண்டு புதிய வருடத்தில் கால் எடுத்து வைத்துள்ளனர்.

இந்த அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால் நாட்டு மக்கள் தினந்தோறும் பட்டினி சாவை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த கொடுங்கோல் அரசை வருட ஆரம்பத்திலேயே வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.

எனவே இந்த கொடுங்கோல் அரசை குடும்பத்துடன் வீட்டுக்கு அனுப்ப அனைவரும் அணிதிரள வேண்டும் – என்றார்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...