sajith 3
செய்திகள்அரசியல்இலங்கை

ராஜபக்ச அரசை விரட்டியடிக்க அணிதிரளுங்கள்! – சஜித் அறைகூவல்

Share

பல எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே குடும்ப ஆட்சியில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த ராஜபக்ச அரசை விரட்டியடிக்கவேண்டும்.

இதற்காக அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் என நட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ச அரசின் சர்வாதிகார ஆட்சியால் மக்கள் வறுமையின் கோரத்தாண்டவத்தின் பிடியில் சிக்கித்தவிர்க்கின்றனர். எண்ணிலடங்காத சொல்லெணாத்துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக்கொண்டு புதிய வருடத்தில் கால் எடுத்து வைத்துள்ளனர்.

இந்த அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால் நாட்டு மக்கள் தினந்தோறும் பட்டினி சாவை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த கொடுங்கோல் அரசை வருட ஆரம்பத்திலேயே வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.

எனவே இந்த கொடுங்கோல் அரசை குடும்பத்துடன் வீட்டுக்கு அனுப்ப அனைவரும் அணிதிரள வேண்டும் – என்றார்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...