24 6665523be31e1
இந்தியாசெய்திகள்

மோடி மீது குற்றச்சாட்டை முன்வைத்த ராகுல் காந்தி

Share

மோடி மீது குற்றச்சாட்டை முன்வைத்த ராகுல் காந்தி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தவறான முதலீட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், மோடி மீது நாடாளுமன்ற விசாரணைகளை நடாத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத காரணத்தினால் இந்திய பங்குச்சந்தையில் (Indian Stock Market) பாரிய சரிவு ஏற்பட்டிருந்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தியப் பங்குச்சந்தை 3.4 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது.

இதனையடுத்து, அமித் ஷா (Amit Shah) உள்ளிட்ட மோடி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சந்தையில் பாரிய வளர்ச்சி ஏற்படும் என தெரிவித்திருந்தனர்.

எனினும், அவர்கள் எதிர்பார்த்தவாறு தேர்தல் முடிவுகளோ பங்குச்சந்தை மாற்றமோ இடம்பெறாது மாறாக பங்குச்சந்தையில் பாரிய சரிவு ஏற்பட்டிருந்தது.

மேலும், இது கடந்த நான்கு வருடங்களில் ஏற்பட்ட மிக மோசமான சரிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மோடி அரசாங்கம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை தவறான வழிநடத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அழுத்தத்தில் ராகுல் காந்தி, போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...