மோடி ராகுல்
அரசியல்இந்தியாசெய்திகள்

பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றார் மோடி! – ராகுல் குற்றச்சாட்டு

Share

பெற்றோல், டீசல் வரி குறைப்பு விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக ராகுல் காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

பெற்றோல், டீசல் மீதான ‘வட்’ வரியைக் குறைக்குமாறு, மாநில அரசுகளைப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில் கருத்துத் தெரிவித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“எரிபொருள் விலை உயர்வுக்கு மாநிலங்கள் மீது பழி போடுகின்றது. நிலக்கரி தட்டுப்பாட்டுக்கும் மாநிலங்கள் மீது பழி போடுகின்றது. ஒட்சிசன் தட்டுப்பாட்டுக்கும் மாநிலங்கள் மீது பழி போடுகின்றது.

எரிபொருள் மீதான வரிகளில், 68 சதவீதத்தை மத்திய அரசுதான் எடுத்துக்கொள்கின்றது. இருப்பினும், பிரதமர் மோடி பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றார். அவரது கூட்டாட்சி தத்துவம், ஒத்துழைப்பானது அல்ல, நெருக்கடி கொடுக்கக்கூடியது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...