image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

Share

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

ஆனமடுவ கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, தாக்குதல் நடத்திய அதிபர் தொடர்பாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர் கெடத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியாவார்.

சிறுமி முந்தைய நாள் பாடசாலைக்குச் செல்லாததால் கோபமடைந்த அதிபர், அருகில் இருந்த தடியை எடுத்து பலமுறை தாக்கியதாகக் கூறி, சிறுமியின் பெற்றோர் ஆனமடுவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதன் அடிப்படையில், ஆனமடுவ காவல் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் சஞ்சீவ பிரேமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் ஆர்.ஏ. வன்னியாராச்சி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
image 1200x630 7
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச குற்றவியல் விசாரணையை சரத் பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம்...

image 1000x1000 4
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து பிரபல பாடகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

டுபாய்க்குப் பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இலங்கையின் பிரபல பாடகர் சாமர ரணவக்க என்பவர்...

image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...

image 1000x1000 1
செய்திகள்இலங்கை

கோர விபத்து: அநுராதபுரத்தில் யாழ் பெண் உட்பட இருவர் பலி, 8 பேர் காயம்

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின்...