230413 Sri Lanka PTA 32JX8B7 highres
செய்திகள்அரசியல்இலங்கை

PTA மற்றும் PSTA சட்டங்களை உடனடியாக மீளப் பெறு! – நீதி அமைச்சிற்கு முன்பாக சிவில் அமைப்புகள் பாரிய போராட்டம்.

Share

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக இரத்துச் செய்ய வலியுறுத்தி, நீதி அமைச்சிற்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (30) ஒரு பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாகச் சிறையிலிருக்கும் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு பல தசாப்தங்களாக அமுலிலுள்ள PTA (Prevention of Terrorism Act) சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்.

ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையில் அமைந்துள்ள புதிய PSTA (Protection of the State Terrorism Act) சட்ட வரைபை மீளப் பெற வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், இத்தகைய கடுமையான சட்டங்களைத் தொடர்ந்து வைத்திருப்பது சர்வதேச ரீதியில் இலங்கைக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் எனப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

 

 

Share
தொடர்புடையது
26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...