IMG 20220401 WA0047
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணக் கொடுப்பனவில் பாரபட்சம்: புத்தளம் – கொழும்பு வீதியை மறித்து முந்தல் மக்கள் போராட்டம்!

Share

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம மக்கள் நேற்று (20) மாலை பாரிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வீரபுர, கரிக்கட்டை மற்றும் ஹிதாயத் நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், நேற்று மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை புத்தளம் – கொழும்பு பிரதான வீதியை மறித்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வெள்ளத்தினால் உண்மையாகப் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் பெயர்கள் 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பட்டியலில் சேர்க்கப்படவில்லை. தகுதியுள்ளவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

போராட்டக்காரர்கள் வீதியை மறித்ததால், புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் ஹிதாயத் நகர் பகுதியில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. முந்தல் மற்றும் மதுரங்குளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை (22) முந்தல் பிரதேச செயலகத்திற்கு வந்து புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பொய்யான தகவல்களை வழங்கி இந்தக் கொடுப்பனவைப் பெற முயற்சிப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. எவ்விதப் பாகுபாடும் இன்றி உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் இக்கொடுப்பனவு கிடைப்பதை உறுதி செய்வதாக அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...