20230519 094930 scaled
செய்திகள்

வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம்!

Share
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினர் எனும் பெயரில் சிவசேனை, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலரினால்  வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகமுன்றலில் இன்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறித்த போராட்டத்தில் ஆறு பேர் கலந்து கொண்டதோடு ஜனாதிபதியினால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாள்ஸ் அவர்களுடன்   தொடர்புடைய லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு குறித்த ஆறு பேரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
அத்தோடு ஊழல்வாதியை ஜனாதிபதி  பதவி நீக்கம் செய்ய  வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்,
 முன்னாள வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜவிற்கு அதராவன சிலரே இந்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தியதாக பொலிசாருக்கு  கிடைத்த புலனாய்வு  தகவலின் வும்அ டிப்படையில் இன்று காலையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் களமிறக்கப்பட்டு வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகத்திற்கு  பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் குறித்த போராட்டத்தில் 6  பேர் மாத்திரமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
20230519 094933 20230519 094809 20230519 094900
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...