ரணில் மற்றும் தேசபந்துவிற்கு எதிராக மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு? – மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அதிரடி முன்மொழிவு!

ranil wickremesinghe with deshabandu tennakoon

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய வழக்குகள் தொடர்பில், மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட அமர்வு (Trial-at-Bar) முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்மொழிந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தனது மனைவியின் கலாநிதி (Doctorate) பட்டம் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியா சென்றபோது, அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு.

வெலிகம W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் அதில் தேசபந்து தென்னகோனுக்கு இருக்கும் தொடர்பு குறித்த வழக்கு.

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்துகொண்ட விசேட கூட்டத்திலேயே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

வெலிகம துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதால், டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேசபந்து தென்னகோன் மற்றும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யுஹான் அபேவிக்ரமவுக்குச் சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் குறித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அறிக்கை இன்னும் முழுமையாகக் கிடைக்காததால், அது தொடர்பான தீர்மானம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வகித்த உயர் பதவிகளைக் கருத்திற்கொண்டு, இந்த வழக்குகளை விசேட நீதிபதிகள் அமர்வு மூலம் விசாரிப்பதே பொருத்தமானது என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Exit mobile version