Burundi fire
செய்திகள்உலகம்

சிறைச்சாலையில் தீ: 38 பேர் உயிரிழப்பு

Share

புருண்டி- தலைநகர் கிடேகாவில் உள்ள பிரதான சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியின் தலைநகர் கிடேகாவில் உள்ள பிரதான சிறைச்சாலையில் நேற்று (07) தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 60- இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என நாட்டின் துணை ஜனாதிபதி ப்ரோஸ்பெர் பஸூம்பன்ஸா தெரிவித்தார்.

400 போ் மட்டுமே அடைக்கக்கூடிய சிறைச்சாலையில், 1,500 இற்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததால் அதிகளவான உயிரிழப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து புருண்டி துணை ஜனாதிபதி ப்ரோஸ்பெர் பஸூம்பன்ஸா கருத்து வெளியிடவில்லை.

இதேவேளை கிடேகாவில் உள்ள பிரதான சிறைச்சாலையில் கடந்த ஓகஸ்ட் மாதமும் தீ விபத்துச் சம்பவம் ஏற்பட்டிருந்தது. எனினும் உயிரிழப்புச் சேதங்கள் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...