Burundi fire
செய்திகள்உலகம்

சிறைச்சாலையில் தீ: 38 பேர் உயிரிழப்பு

Share

புருண்டி- தலைநகர் கிடேகாவில் உள்ள பிரதான சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியின் தலைநகர் கிடேகாவில் உள்ள பிரதான சிறைச்சாலையில் நேற்று (07) தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 60- இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என நாட்டின் துணை ஜனாதிபதி ப்ரோஸ்பெர் பஸூம்பன்ஸா தெரிவித்தார்.

400 போ் மட்டுமே அடைக்கக்கூடிய சிறைச்சாலையில், 1,500 இற்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததால் அதிகளவான உயிரிழப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து புருண்டி துணை ஜனாதிபதி ப்ரோஸ்பெர் பஸூம்பன்ஸா கருத்து வெளியிடவில்லை.

இதேவேளை கிடேகாவில் உள்ள பிரதான சிறைச்சாலையில் கடந்த ஓகஸ்ட் மாதமும் தீ விபத்துச் சம்பவம் ஏற்பட்டிருந்தது. எனினும் உயிரிழப்புச் சேதங்கள் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...