Screenshot 2025 12 05 173047
செய்திகள்இலங்கை

பதிவு செய்யப்படாத வர்த்தகர்களுக்கும் நிவாரணம்: அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய கடன் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு!

Share

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களை (SME) மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட கடன் திட்டங்கள் மற்றும் நிவாரண பொறிமுறைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.

10 ஆவது நாடாளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட, ஆனால் இதுவரை பதிவு செய்யப்படாத சிறு வர்த்தகர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வங்கிகளுடன் இணைந்து வர்த்தக சமூகத்திற்கு கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் ஒவ்வொரு வர்த்தகத்தையும் பதிவு செய்யும் முறையை உருவாக்க வேண்டும்.

அனர்த்தத்திற்குப் பின் மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும்போது, அது முன்பிருந்த நிலையை விட மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்தில், செயற்திறனுடன் செலவிட வேண்டும். தவறும் பட்சத்தில் எதிர்பார்க்கும் பொருளாதார இலக்குகளை அடைய முடியாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மீண்டும் தமது வாழ்வாதாரத்தைத் தொடங்குவதுடன், நாட்டின் தேசிய பொருளாதாரப் பொறிமுறைக்குள் முறைசார்ந்த வர்த்தகர்களாக அவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள...

1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...