கொழும்பு மாநகர சபையில் 15 கால ஊழல்: ஜனாதிபதியால் விசேட விசாரணை ஆணைக்குழு நியமனம்!

New Project 198

கொழும்பு மாநகர சபையில் (CMC) கடந்த 15 ஆண்டுகளாக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான 15 ஆண்டுகாலச் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

நிதி முறைகேடுகள், முறையற்ற நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியமை போன்ற புகார்கள் குறித்து இந்த ஆணைக்குழு விரிவாக விசாரணை நடத்தும்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் முதல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் ஒரு முன்னேற்ற அறிக்கை வழங்கப்பட வேண்டும். 6 மாதங்களுக்குள் முழுமையான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும்.

விசாரணைகளின் போது கண்டறியப்படும் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, சேகரிக்கப்பட்ட தகவல்களை சட்டமா அதிபர் அல்லது இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கும் இந்த ஆணைக்குழுவிற்குப் பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version