WhatsApp Image 2022 01 25 at 10.39.25 AM
செய்திகள்இலங்கை

வலிமேற்கில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு!!

Share

வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று ஆரம்பமானது. இன்றைய கூட்டத்தினை இடை நிறுத்திவிட்டு பிரதேச சபை உறுப்பினர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரியும், சம்பள அதிகரிப்பை கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் என பலர் முன் பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றோம்.்

30 வருடங்களுக்கு மேலாக சேவையைச் செய்து ஓய்வுபெறும் வயதிலும் முன்பள்ளி ஆசிரியர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.

நமக்கு வெறும் ஆறாயிரம் ரூபாவே வேதனமாக வழங்கப்படுகின்றது. தற்கால விலைவாசி அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஆறாயிரம் ரூபா ஆறு நாட்களுக்காவது போதுமா?

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என நாங்கள் கடந்த பிரதேச சபை அமர்வில் தீர்மானம் எடுத்துள்ளோம். அந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம்.

ஒரு குழந்தை தாயிடம் இருந்து அடுத்த படியாக முன்பள்ளி ஆசிரியர்களிடமே வருகின்றது. ஒரு தாய் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் நாங்கள் அந்த மாணவர்களுக்கு செய்கின்றோம். ஆனால் எங்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

எனவே புதிய அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு நமது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் – என்றனர்.

போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...