திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் இன்று (நவம்பர் 18) திருகோணமலைக்கு விஜயம் செய்து, ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தார்.
அரசாங்கத்தின் மீது விமர்சனம்: தற்போதைய அரசாங்கத்தை “முதுகெழும்பில்லாத அரசாங்கம்” என அவர் விமர்சித்துள்ளார்.
காசியப்ப தேரர் மீதான தாக்குதலின் காணொளியைக் கண்டு தாம் ஆவேசமடைந்ததேன் எனக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவம் பௌத்த சமயத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தினால் இரண்டு பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்ச்சைக்குள்ளான குறித்த விகாரைக்கான வரலாறு சுனாமிக்கு (2004) முதலே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.