image 87489e8d1f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை முத்து நகரில் 42 நாட்களான சிசு உயிரிழப்பு: பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைப்பு – காவல்துறையினர் விசாரணை!

Share

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களேயான சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

இரவு குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டுத் தாயார் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து சிசுவைப் பார்த்தபோது அது உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது. இதுவே ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இறந்த சிசுவைப் பரிசோதித்தபோது, அதன் பெற்றோர், சிசுவை ‘எக்கோ’ பரிசோதனைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு வருமாறு மருத்துவர்கள் முன்னர் தமக்குக் கூறியிருந்தாகக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

சிசுவின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முற்பட்டபோது அதனை மீட்ட சீனக்குடா காவல்துறையினர், சிசுவின் உடலைத் திருகோணமலைப் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர். சிசுவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகச் சீனக்குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
images 10 1
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

1200 675 25395250 thumbnail 16x9 1
செய்திகள்உலகம்

சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

c062bcf6aceaa92908367ec4a579f375a27fd715ccd5277c234a953549da3bc8
உலகம்செய்திகள்

மதுரோவை உடனடியாக விடுதலை செய்: அமெரிக்காவின் நடவடிக்கையை மேலாதிக்கச் செயல் எனச் சீனா சாடல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது...