istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

Share

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி, பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிக வலுக்கொண்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அந்த வாகனங்களைக் கைப்பற்றி அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மோட்டார் சைக்கிள்கள் என்பது ஒருவரது பயண வசதிக்காகவே தவிர, பிரதான வீதிகளில் பந்தயங்களில் ஈடுபடுவதற்கோ, பாதசாரிகளை ஆபத்தில், தள்ளுவதற்கோ அல்லது ஒழுக்கத்துடன் வாகனங்களைச் செலுத்துபவர்களுக்கு இடையூறு விளைவிப்பதற்கோ அல்ல. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ள இந்த கலாசாரம் மிகவும் பயங்கரமானது.

எனவே, அதிக வேகத்துடன், அஜாக்கிரதையாகவும் ஆபத்தான முறையிலும் வாகனங்களைச் செலுத்துபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளோம். தற்போது 18 வயதுக்கும் குறைந்தவர்கள் கூட மோட்டார் சைக்கிளை செலுத்துகின்றனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிவேகமாகச் சென்று ஏற்பட்ட விபத்தில் ஒரு இளைஞன் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக்கிரியை ஊர்வலத்திலும் பலர் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் பயணித்தனர்.

இளைஞர்களின் இந்தப் போக்கு ஆரோக்கியமானது அல்ல. எனவே, சட்டத்தை மிகக் கடுமையாக நிலைநாட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோதமான அதிக வலுக்கொண்ட மோட்டார் சைக்கிள்களை உடனடியாகக் கைப்பற்றி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அவற்றை அரசாங்க உடமையாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...