நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். e1639100779969
செய்திகள்இந்தியா

உயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

Share

உலங்குவானூர்தி விபத்தில் உயிர் நீத்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ஏனைய வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திமோடி அஞ்சலி செலுத்தினார்.

குன்னூர் வெலிங்கடன் இராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த 13 பேரின் உடல்கள் மதியம் சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட வீரர்களின் உடல்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

விமானம் மூலம் டில்லி பாலம் விமான நிலையத்துக்கு இரவு கொண்டு செல்லப்பட்ட 13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு இணையமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மூன்று படைகளின் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

 

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...