25 6816c4b6ea0b8
செய்திகள்அரசியல்இலங்கை

பாடப்புத்தகத் தவறுக்கு அதிகாரியல்ல, பிரதமரே பதவி விலக வேண்டும்: நாமல் ராஜபக்ச கடும் விமர்சனம்!

Share

தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணப்பட்ட பாரிய தவறுகள் தொடர்பில், கல்வி அமைச்சராகப் பதவி வகிக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவே பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவி விலகியுள்ளமையைச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, விசாரணைக் குழுவின் தலைவரை நியமித்தவர் பிரதமர் என்பதால், அதன் தோல்வி மற்றும் பாடப்புத்தகத் தவறுகளுக்கு அவரே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். ஒரு கீழ்நிலை அதிகாரி பதவி விலகுவது தீர்வாகாது.

பாடப்புத்தக விவகாரம் தொடர்பாகக் கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளதை அவர் கேலி செய்துள்ளார்.

அமைச்சின் நிர்வாகத் திறமையின்மையைச் சுட்டிக்காட்டிய அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சிற்கு வெளியே உள்ள ஒருவரால் பாடப்புத்தகத்தைத் தன்னிச்சையாக அச்சிட முடியாது. இது அமைச்சிற்குள்ளேயே திட்டமிடப்பட்டு அச்சிடப்பட்டிருக்கும்போது, அது குறித்துத் திணைக்களங்களில் முறைப்பாடு செய்வது வேடிக்கையானது.

ஒரு பாடப்பரப்பு தொடர்பான முடிவுகளை ஒரு தனிநபர் தன்னிச்சையாக எடுக்க முடியாது என்றும், அமைச்சின் செயலாளரை யாரும் அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிர்வாக ரீதியான தவறுகளை மூடிமறைக்க அதிகாரிகளைப் பலிகடா ஆக்காமல், அரசியல் ரீதியான தலைமையே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...