Appropriation Bill 2025 Submitted in Parliament by Harini Amarsuriya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டு மக்கள் விரும்பினால் இப்போதே வீடு செல்லத் தயார்: நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆவேச உரை!

Share

தமக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் நேற்று (23) காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

“எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், நான் இப்போதே வீட்டிற்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் கட்டுப்படுவது நாட்டு மக்களுக்கும் எனது மனசாட்சிக்கும் மட்டுமே” எனப் பிரதமர் சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவதாகக் கூறி தோல்வியடைந்த எதிர்க்கட்சியினர், இப்போது பிரதமரை வீட்டுக்கு அனுப்பும் ‘பகல் கனவு’ காண்கிறார்கள். அது ஒருபோதும் பலிக்காது என அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர்,இச்சட்டம் பல்கலைக்கழக கட்டமைப்பை அரசியல்மயமாக்கும் என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். 1978-ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

தரம் 6 முதல் 13 வரை மாணவர்களுக்கு நடைமுறைக்குச் சாத்தியமான, சர்வதேச சவால்களை எதிர்கொள்ளக்கூடிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு.

தரம் 6 பாடப்புத்தகத்தில் ஏற்பட்ட தவறை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அதனைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில வாரங்களாகத் தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகம் மற்றும் கல்வி மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சி அறிவித்திருந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நேற்றைய விவாதம் அமைந்திருந்தது.

 

 

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...