image 9653c01cae
செய்திகள்இலங்கை

ஓய்வூதியம் என்பது பாதுகாப்பு, சலுகையல்ல: ஜனாதிபதிக்கு கரு ஜயசூரிய அவசரக் கடிதம்!

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் காப்பாளர் என்ற ரீதியில் அவர் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

ஓய்வூதியத்தை ரத்து செய்வதால் ஏற்படக்கூடிய சமூக மற்றும் அரசியல் விளைவுகள் குறித்து அவர், 1956-ஆம் ஆண்டிற்குப் பின்னரே சாதாரண மனிதர்களுக்கும் அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. ஓய்வூதியம் இல்லையெனில், அரசியல் மீண்டும் செல்வந்தர்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்களின் வசமாகிவிடும்.

தமது சொத்துக்களை விற்று மக்கள் சேவையில் ஈடுபடும் நேர்மையான அரசியல்வாதிகள், முதுமைக் காலத்தில் வாழ்வாதாரமின்றித் தவிக்கும் நிலை ஏற்படும். இது எதிர்காலத்தில் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வருவதைத் தடுக்கும்.

தன்னைப் போன்ற ஒரு சிலர் இந்த ஓய்வூதியத்தைத் தானதர்மங்களுக்குப் பயன்படுத்தினாலும், பெரும்பான்மையான முன்னாள் உறுப்பினர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்கு இதையே நம்பியுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வரும் நிலையில், ஜனநாயகத்தையும் சாதாரண மக்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் ஒரு நடுநிலையான தீர்வை எட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே இந்த ஓய்வூதிய ரத்து தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கரு ஜயசூரியவின் இந்தத் தலையீடு அரசியல் தளத்தில் புதிய விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...

06 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு: தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல் 8.00 மணி முதல்...