parliament of sri lanka 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா பேரிடர் மீட்பு: ரூ.500 பில்லியன் குறைநிரப்பு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்!

Share

‘டிட்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை (Supplementary Estimate) நாடாளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இரண்டு நாள் விவாதத்தின் நிறைவில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நிவாரணப் பணிகள் குறித்துப் பின்வரும் முக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

டிட்வா பேரிடரால் ஏற்பட்ட சொத்து இழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பில் முறையான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான உரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி தற்போது கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் 100% ஆரம்பக்கட்ட நிவாரண நிதிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் இன்னும் நிவாரண நிதி சென்றடையவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தகுதியுடைய அனைத்துக் குடும்பங்களுக்கும் பாரபட்சமின்றி உரிய நிவாரணம் கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என உறுதியளித்தார்.

இந்த பாரிய நிதி ஒதுக்கீடானது வீடுகளைப் புனரமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளைச் சீர்செய்தல் மற்றும் விவசாயிகளுக்கான இழப்பீடு உள்ளிட்ட மறுசீரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...