35 கோடி கடன் பெற்றுத் தருவதாக ரூ. 70 லட்சம் மோசடி: பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது!

gold man hari nadar arrested againg by chennai central crime branch for defrauding businessman of rs 100 crore as loan in bangalore

தொழிலை விரிவுபடுத்த கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபர் ஒருவரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது தொழிலை மேம்படுத்த நிதி தேவைப்பட்ட நிலையில், நண்பர் ஒருவரின் மூலம் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரைத் தொடர்பு கொண்டுள்ளார்.

தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ரூ. 35 கோடி கடன் பெற்றுத் தருவதாக ஹரி நாடார் உறுதியளித்துள்ளார். இதற்கான நடைமுறைச் செலவுகளுக்காக (Processing Fee) ரூ. 70 லட்சத்தை முன்கூட்டியே பெற்றுள்ளார்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட ஹரி நாடார், வாக்குறுதி அளித்தபடி கடன் பெற்றுத் தரவில்லை. அத்துடன் வாங்கிய ரூ. 70 லட்சத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

பாபு (சேலம் – மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்) ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

 

 

Exit mobile version