MediaFile 13
செய்திகள்இலங்கை

நாடே ஒன்றாக: 3 மாதங்களில் 77,000 பேர் கைது! ஒரு டன்னுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

Share

இலங்கை காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் நாடே ஒன்றாக எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த சில மாதங்களில் பாரிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் 77,824 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 77,105 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய போதைப்பொருட்களில் 1,280 கிலோகிராம் மற்றும் 956 கிராம் ஐஸ் போதைப்பொருள் , 320 கிலோகிராம் 741 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 2,341 கிலோகிராம் மற்றும் 523 கிராம் கஞ்சா, 132,561 போதை மாத்திரைகள் 155 கிலோ குஷ், 44 கிலோ ஹாஷிஷ் மற்றும் 146 கிலோ மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும், மேலதிகமாக 5,568,583 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களில் 1,582 சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 68 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருளுக்கு அடிமையான 1,449 நபர்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டு, அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...