வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் மட்டுமின்றி, வீட்டுக் காவல் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தவர்களும் இந்தச் சட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய வெனிசுலா பாராளுமன்ற சிறப்புக் குழுத் தலைவர் ஜோர்ஜ் அர்ரியாசா (Jorge Arreaza), பொது மன்னிப்புக் கோரி இதுவரை 4,203 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.
சட்டம் நடைமுறைக்கு வந்த நான்கு நாட்களில் 3,052 பேருக்கு முழு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்த 179 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ அமெரிக்கப் படைகளால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் (Delcy Rodríguez) தலைமையிலான புதிய அரசு, சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கப் போவதாக அறிவித்தது. அதன் அடிப்படையில் இந்த விடுதலைகள் இடம்பெறுகின்றன.
நிபந்தனைகள்:
கொலை, போதைப்பொருள் கடத்தல், இராணுவக் கிளர்ச்சி மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த பொது மன்னிப்புச் சட்டத்தில் இடமில்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

