25 693e99f4151ce
செய்திகள்உலகம்

டிட்வா சூறாவளியால் 29,649 வர்த்தக நிலையங்கள் பாதிப்பு: மீளக் கட்டியெழுப்ப சலுகை வட்டியில் கடன் உதவி!

Share

‘டிட்வா’ சூறாவளி காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 29,649 வர்த்தக இடங்கள் மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

டிசம்பர் 16ஆம் திகதி வரை திரட்டப்பட்ட தரவுகளின்படி, 861 பாரிய அளவிலான ஏற்றுமதி தொழிற்சாலைகள், 8,664 நடுத்தர அளவிலான வர்த்தகங்கள், 12,300 சிறிய அளவிலான வர்த்தகங்கள் மற்றும் 9,844 நுண் அளவிலான வர்த்தகங்கள் சேதமடைந்துள்ளன.

அதிகளவான பாதிப்புகள் புத்தளம், கம்பஹா, கொழும்பு, கண்டி, கேகாலை, குருநாகல், திருகோணமலை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட 9,628 தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளன. பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு 200,000 ரூபாய் கடன் மானியம் வழங்கப்படும். இந்தக் கடன்களுக்கு வெறும் 3 வீதம் (3%) என்ற மிகக் குறைந்த வட்டி வீதமே வசூலிக்கப்படும்.

ஏற்றுமதி உற்பத்தியாளர்களுக்காக மூன்று அரச வங்கிகள் ஊடாகத் துரித கடன் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை 2025 டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும். மத்திய வங்கியின் இணக்கப்பாட்டுடன், தனியார் வங்கிகள் ஊடான இந்தச் சலுகை வசதிகள் 2026 ஜனவரி முதல் வழங்கப்படும்.

அமைச்சில் பதிவு செய்யப்படாத ஏனைய 20,223 வணிக நிறுவனங்களுக்கு, அந்தந்த துறை சார்ந்த அமைச்சுகள் ஊடாக விசேட உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...