திருகோணமலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

image 72cd5b5786

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திருகோணமலை சிவன் கோவிலில் இன்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் கிழக்கு மாகாண விஜயம் இன்று ஆரம்பமாகின்றது.

முதலாவதாக திருகோணமலை மாவட்டத்துக்கு செல்லவுள்ள அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.இன்று காலை 8 மணிக்கு, திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு செல்லவுள்ள அவர், அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவார்.

அதன்பின்னர் நிலாவெளியிலுள்ள சாம்பல் தீவு தமிழ் மகா வித்தியாலயத்துக்கு டிஜிட்டல் உபகரணங்களை கையளிக்கவுள்ளார்.கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதகுப்பாதை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியும் வழங்கவுளளார்.மறுநாள் 4 ஆம் திகதி திருகோணமலை ஆயரை சந்திக்கவுள்ளார். அரசியல் கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.

#Srilanknews

Exit mobile version