100,000 காணித் துண்டுகள் – மன்னாரில் நேர்முகத் தேர்வு

977

இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு லட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்துக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த இளையோருக்கு நேர்முகத் தேர்வு கடந்த வியாழக்கிழமை முதல் இடம் பெற்று வருகின்றது.

விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் அடிப்படையில் அவர்களால் மேற்கொள்ளவுள்ள சுயதொழில் தொடர்பான திட்டமுன்மொழிவு மற்றும் நிதி விவரம் தொடர்பான ஆவணங்கள் குறித்த நேர்முகத் தேர்வில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிக அனுபவங்கள் உட்பட சுயதொழில் முயற்சி தொடர்பான பின்புலங்கள் தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்முகத் தேர்வுக்கு ஒரே தடவையில் பல நூற்றுக்கணக்கானவர்களை அழைத்தமையால் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளித்தோர் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version