யாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வயல் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை (டிப்போ) சாலையில் பேருந்து சாரதியாக பணியாற்றும் உடுப்பிட்டியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மதனராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Leave a comment