பொலன்னறுவை பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!!

9 Dead 2

பொலன்னறுவை பொலிஸ் பிரிவில் கறுவாத்தோட்டம் பகுதியில் நீரில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று(30) கறுவாத்தோட்டப் பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

லுணுவில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

 

Exit mobile version