WHO
செய்திகள்உலகம்

பல நாடுகளை தாக்கியுள்ள ஒமிக்ரொன் – மீண்டும் எச்சரிக்கும் WHO

Share

பல நாடுகளை தாக்கியுள்ள ஒமிக்ரொன் – மீண்டும் எச்சரிக்கும் WHO

ஒமிக்ரொனால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பல நாடுகள் பாதிக்கும் என WHO எச்சரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் திரிவு ஆனா ஒமிக்ரொன் சுமார் 23 நாடுகளில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமிக்ரொன் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் தாக்கும் திறன் கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில்ஊடகவியலாளர்களுக்கு ஜெனிவாவில் கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ்,

தென் ஆப்பிரிக்காவில் ஜெனிவாவில் கொரோனா வைரஸின் திரிவான ஒமிக்ரொன் வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .

முதலில் 4 அல்லது 5 நாடுகளில் காணப்பட்ட ஒமிக்ரொன் வைரஸ் தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வைரஸ் மேலும் பல நாடுகளுக்கு விரைவாக பரவுமெனவும் எச்சரித்துள்ளார்.

ஒமிக்ரொனின் இந்த தாக்கத்தை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஒமிக்ரொன் கண்டுபிடிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா, அமெரி்க்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்மை குறிப்பிடத்தக்கது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...