fuel tanker blast
செய்திகள்உலகம்

ஆப்ரிக்காவில் வெடித்த எண்ணெய் குதம் – 91 பேர் உடல் கருகிச் சாவு

Share

ஆப்ரிக்காவில் வெடித்த எண்ணெய் குதத்தல் 91 பேர் உடல் கருகி சாவடைந்துள்ளனர்.

ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டின் ப்ரீடவுன் நகரத்தில் உள்ள எண்ணெய் குதத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 90-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி சாவடைந்ததாக அந்நாட்டுச் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இச்செய்தி தொடர்பில் தெரியவருவது,

எண்ணெய் குதத்தில் பரவூர்தி ஒன்று மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 91 பேர் பலியாகி உள்ளதாகவும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் குதம் அருகே நடந்த இந்த விபத்தினால் தீப்பிடித்து அங்குள்ள பெற்றோல் சேமிப்பு கிடங்கு வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை தமது அரசு அனைத்தையும் செய்யும் என கூறியுள்ளார்.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...