263156560 305994174864450 6241770824106216061 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

Share

இன்றைய தினம் 37 ஆம் ஆண்டு ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட எல்லை கிராமமான ஒதியமலையில் இராணுவத்தினரால் 32 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

அதனை நினைவுகூறும் முகமாக இவ்வாண்டும் சனசமூக நிலைய வளாகத்தில் காணப்படும் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒதியமலைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி வழிபாடுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, ஒட்டுசுட்டான் பிரதேச சபை உறுப்பினர் இ.சத்தியசீலன், ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர், படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 8cb8563933
செய்திகள்இலங்கை

கண்டி மெததும்பரையில் சோகம்: நிகழ்வின் போது மனநல நோயாளி ஒருவரால் கத்திக்குத்து – 7 பேர் காயம்!

கண்டி மாவட்டம், மெததும்பர (Medadumbara) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அன்று...

HIV 1200px 22 10 26 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரிப்பு: ஆண்களை மையமாகக் கொண்ட தொற்றுகள் உயர்வு – 2009க்குப் பின் உச்சம்!

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்றுகள் கணிசமாக...

1c4025e825b9e5cf5fec4832de98f8c41762857214847193 original
செய்திகள்இந்தியா

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அவசர புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நாளை...

MediaFile 1 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: திருக்கோவில் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கல்முனையில் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நியூசிலாந்துப் பிரஜை ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத்...