image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

Share

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

ஜகத் மனுவர்ணவுக்கு எதிராக கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நிலுவையிலுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அப்போது அவரது சட்டத்தரணி, “தனது கட்சிக்காரர் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ காணி பகிர்ந்தளிப்பு நிகழ்வொன்றில் பங்கேற்றதால் சமூகமளிக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இன்று (02) குறித்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண நீதிமன்றத்திற்கு வருகை தராததை அடுத்து, நீதவான் இக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார். அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு திறந்த பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமகால அரசியல் சூழலில், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராகப் பழைய வழக்குகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...