இனி எந்த பதவியையும் வகிக்க போவதில்லை! – பிபீ ஜயசுந்தர

PB Jayasundara

” ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அரச நிர்வாகத்தில் வேறு எந்த பதவியையும் வகிக்க மாட்டேன்.” – என்று ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர, அப்பதவியில் இருந்து நாளையுடன் ஓய்வு பெறுகின்றார்.

இந்நிலையில் அவருக்கு அரச ஆலோசகர் அல்லது நிதி அமைச்சின் ஆலோசகர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறானதொரு பின்பலத்திலேயே, இனி எந்த பதவியையும் வகிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

” சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய ஜனாதிபதிகளின்கீழ் நான் முக்கிய பதவிகளை வகித்துள்ளேன். எனவே, ஓய்வு பெற்ற பின்னர் புத்தகமொன்றை எழுதவுள்ளேன்.” – என்று பிபீ ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version