மார்ச் 05 ஆம் திகதி முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கை மின்சார சபைக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இன்றும் செலுத்தப்பட்டது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, நாளை முதல் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
#SrilankaNews
Leave a comment