மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சின் அறிவிப்பு!

இன்று (10) முதல் நாட்டின் எந்தப் பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி அமைச்சில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் வழமை போன்று மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

 

Exit mobile version