இனியும் நாடு முடங்காது! - சுகாதார அமைச்சர் நம்பிக்கை
செய்திகள்உலகம்

இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை

Share

இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நாட்டை முடக்க வேண்டிய தேவை வராது.

இருப்பினும், எதிர்வரும் வாரங்களை அவதானத்துடன் கடக்க வேண்டும் என பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வாங்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நான்காவது அலை ஜூலை மாதத்திலேயே தொடங்கிவிட்டது. எம்மிடம் தடுப்பூசி இருந்த காரணத்தால் நான்காவது அலையின் பாதிப்பை முடிந்தளவில் தடுக்க முடிந்துள்ளது.நாட்டில், 80 வீதமானோர் ஒரு டோஸையாவது பெற்றுக்கொண்டுள்ளனர்.

56 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி அடுத்த மாதம் முதல் ஏற்றப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்குப் பணித்துள்ளோம். – என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தீவுகளில் நான்காவது அலை படுவேகமாகப் பரவி வருகிறது. பிரான்ஸின் உள்ளேயும் இந்த நிலைமை விரைவில் தோன்றலாம் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கோடை விடுமுறை முடிவடையும் நிலையில், புதிய கல்வி ஆண்டுக்காகப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதனால் இளவயதினரிடையே டெல்ரா வைரஸ் தீவிரமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என்று தொற்றுநோயியலாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...