வடமேல் மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளை பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச மறுத்துள்ளார்.
அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், ஆனால் மக்களின் நலனுக்காக சமூகத் திட்டங்களில் பெரிதும் ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் குருநாகல் மாவட்டத்தில் தனது தந்தை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.