மத்திய கிழக்கு பதற்றம்: இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பில்லை – கூட்டுத்தாபனம் அறிவிப்பு

06 4

மத்திய கிழக்கில் மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகியுள்ள போதிலும், இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்) தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.டி.எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பி பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டிற்குத் தேவையான போதுமான எரிபொருள் கையிருப்பு தற்போது கையிருப்பில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அடுத்தகட்டத்திற்கான எரிபொருள் இறக்குமதிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பல்கள் உரிய நேரத்தில் நாட்டிற்கு வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதைய கையிருப்புகள் மற்றும் வரும் வாரங்களில் வரவிருக்கும் கப்பல்களைக் கருத்திற்கொண்டு, தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

 

 

Exit mobile version