night tube
செய்திகள்உலகம்

நவம்பர் முதல் மீண்டும் நைட் டியூப் லைன் சேவை

Share

பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க மீண்டும் நைட் லைன் ரயில் சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.

கடந்த மார்ச் 2020 முதல், கொவிட் தொற்று பரவல் காரணமாக, லண்டன்வாசிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும், இரவு நேரங்களில் நகரை முடக்குவது தொடர்பில் கட்டுப்பாடுகள் எவையும் விதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இரவு நேரங்களில், நிலத்தடி ரயில் சேவைகள் இயங்குவதை மீண்டும் கொண்டுவர வேண்டும் என அண்மைக்காலமாக, லண்டன் மேயர் சாதிக் கான் மற்றும் லண்டன் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய மற்றும் விக்டோரியா மாநிலங்களுக்கிடையில், ​​இரண்டு நைட் டியூப் லைன் சேவைகள் மீண்டும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ட்யூப் லைன் சேவை மத்திய லண்டனுக்கு சேவை செய்கிறது. மத்திய லண்டனில் இருந்து அதிகாலை 1 மணிக்கு விக்டோரியா நோக்கி புறப்படும் ரயில், மீண்டும் அதிகாலை 5.30 மணிக்குஅங்கிருந்து மத்திய லண்டனுக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilnaadi.com/news/2021/10/13/night-tube-line-services-again/

 

Reference

Night Tube Service To Return This Weekend — But There’s A Twist

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...