இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தின் (India Maritime Week 2025) போது இது தொடர்பில் இருதரப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை, இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் அவர்களுக்கும், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுரா கருணாதிலக அவர்களுக்கும் இடையே நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பின் போது நடந்தது.
இந்த புதிய கப்பல் பாதையைத் தொடங்குவதன் மூலம் இந்தியா-இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

