சிறைச்சாலை நெரிசலுக்குத் தீர்வு: வெலிசறையில் புதிய சிறைச்சாலை! வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

articles2FG4ChRkM4qssRwE7vhgX3

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடும் இட நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிர்மாணிக்க நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெலிசறை பகுதியில் அமையவுள்ள புதிய சிறைச்சாலை தொடர்பான விபரங்கள் ஏற்கனவே வர்த்தமானியில் (Gazette) அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் புதிய கட்டடங்களை விரைவாக நிர்மாணித்து, தற்போதுள்ள நெரிசலைக் குறைக்கும் வகையில் கைதிகளை அங்கு இடமாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும் வரை, பொருத்தமான சில அரச நிறுவனங்களின் கட்டடங்களைத் தெரிவு செய்து, அவற்றை தற்காலிக சிறைச்சாலைகளாக பயன்படுத்துவதற்கும் நீதியமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் மூன்று மடங்கு அதிகமான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நெரிசலால் கைதிகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதார வசதிகளைப் பேணுவதில் சிறைச்சாலைத் திணைக்களம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய முன்னெடுப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

 

Exit mobile version