Charles Nirmalathan 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கிற்கு ரயிலில் எரிபொருள் விநியோகிக்க வேண்டும் – சார்ள்ஸ் நிர்மலநாதன்

Share

காங்கேசன்துறைக்கு கொழும்பில் இருந்து ரயில் மூலம் வடக்கிற்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை முன்வைத்தார்.

நேற்றைய தினம் வலு சக்தி மற்றும் மின் சக்தி அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தின் போதே இவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

கொழும்பிலிருந்து பவுசர் மூலமாகவே வடக்கிற்கு தேவையான எரிபொருள்கள் காங்கேசன்துறைக்கு விநியோகிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தாமதங்களும் வீண் செலவுகளும் ஏற்படுகின்றன. ரயில் மூலமாக நேரடியாக காங்கேசன்துறைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் காலதாமதமும், செலவும் குறைக்கப்படுகின்றன.

எரிபொருள் விலையின் தொடர் அதிகரிப்பு மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. எரிபொருளின் விலை அதிகரிக்காது இருக்க அரசு நிவாரணங்களை அமைச்சுக்கு வழங்குவதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...