24 676b50856afea
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி நிதியில் பாரிய முறைகேடு: 56 அரசியல்வாதிகளுக்கு சட்டவிரோதமாக 130 மில்லியன் ரூபா வழங்கல்!

Share

ஜனாதிபதி நிதியத்திலிருந்து (President’s Fund) கடந்த காலங்களில் 56 நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை மருத்துவ உதவியாக வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய தணிக்கை அலுவலகம் (National Audit Office) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிதி முறைகேடுகள் 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

விண்ணப்பப் படிவம், வருமான வரம்பு, பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தல் மற்றும் மருத்துவ உதவி வரம்புகள் போன்ற எந்தவொரு அடிப்படை விதிகளையும் பின்பற்றாமல் இந்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் ஒருவருக்குச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக சுமார் 3 கோடி ரூபாய் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய் ‘மீட்பு அடிப்படையில்’ (Recovery basis) வழங்கப்பட்ட போதிலும், அந்தத் தொகை இதுவரை மீள வசூலிக்கப்படவில்லை.

கஜனாதிபதி நிதியிலிருந்து கடன் வழங்க சட்டத்தில் இடமில்லாத நிலையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையும் இதுவரை அரசுக்குக் கிடைக்கவில்லை.

அரச நிதியைத் தகுதியற்ற நபர்களுக்கு, குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளுக்குச் சட்டவிரோதமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கத் தணிக்கை அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...