images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

Share

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும் நல்லூர் பகுதியில் நிலம் வழங்கப்படாது என யாழ். மாநகர முதல்வர் மதிவதனி அதிரடியாக அறிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) நடைபெற்றபோது, நல்லூர் மேற்கு வீதியில் உள்ள காணி நிலத்தில் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

குறித்த இடத்தில் யார் நினைவேந்தலை நடத்துவது என்பதில், சைக்கிள் கட்சிக்கும் மான் கட்சிக்கும் இடையே கடும் வாதப் பிரதிவாதம் நடைபெற்றது.

சைக்கிள் கட்சிக்கு மட்டும் நினைவேந்தல்கள் செய்யும் உரிமை கிடையாது என்றும், இது அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் உரிமை உண்டு என்றும் மான் கட்சியினர் வலியுறுத்தினர். மேலும், வருடா வருடம் சைக்கிள் கட்சியினரே அடாத்தாக முன்னெடுப்பதாகவும் குற்றம் சாட்டி, இம்முறை குறித்த காணியைத் தமக்குக் குத்தகைக்குக் கோரியுள்ளனர்.

ஆனால், சைக்கிள் தரப்பினர் அதனை ஏற்க இயலாதவர்களாகக் குழப்பங்களை உருவாக்கி வருவதாகவும் விவாதிக்கப்பட்டது.

ஒற்றுமை இன்மையால் இரு பிரிவாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவது கீழ்த்தரமான நிகழ்வு எனக் குறிப்பிட்ட முதல்வர், சபை ஏற்கனவே இரு தரப்பினரையும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து முடிவைத் தெரிவிக்குமாறு கோரியிருந்தது.

ஆனால், குறித்த காலப்பகுதியில் இரு தரப்பினரும் எந்தவொரு பதிவையும் சபையுடன் முன்னெடுக்கவில்லை.

இதன் அடிப்படையில், குறித்த விவாதத்தைப் புறக்கணித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) புறக்கணித்திருந்த நிலையில், காணியை இரு தரப்புக்கும் வழங்குவதில்லை என்று சபை தீர்மானித்தது. மேலும், பொது இணக்கப்பாட்டுடன் தேசிய பரப்பில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்த முன்வந்தால், அதற்கு இடம் கொடுக்கப்படும் என்றும் முதல்வர் மதிவதனி தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...