மர்மப் படகு சிக்கியது! – தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணை

IMG 20220311 WA0010 1

இலங்கையில் இருந்து சென்றது எனக் கருதப்படும் மர்மப் படகு ஒன்று இயங்கு நிலையில் தமிழகப் பொலிஸாரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்தப் படகு இயந்திரம் பொருத்தப்பட்டு எரிபொருள் நிரப்பிய நிலையில் ஆட்கள் எவரும் இன்றி நிறுத்தியிருந்தபோதே தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகு ஏதும் கடத்தலுடன் தொடர்புபட்டதா அல்லது நாசவேலைக்கான ஊடுருவல் ஏதும் இடம்பெற்றதா என்பது தொடர்பில் தமிழகப் பொலிஸாரால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.

#IndianNews

Exit mobile version