images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரியில் குரங்குத் தொல்லையை ஒழிக்க 20 கமக்காரர்களுக்கு இறப்பர் துப்பாக்கிகள் வழங்கல்!

Share

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தென்மராட்சி பிரதேசத்தில் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் குரங்குத் தொல்லையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் விசேட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குரங்குகளின் தொல்லையால் தமது பயிர்கள் பெருமளவில் அழிக்கப்படுவதாகச் சாவகச்சேரி கமக்காரர்கள் வழங்கிய புகாரைத் தொடர்ந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான தனது நாடாளுமன்றப் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் இந்த உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 20 கமக்காரர்களுக்குக் குரங்குகளைச் சுட்டுக் கலைப்பதற்கான இறப்பர் துப்பாக்கிகள் (Rubber Bullet Guns) வழங்கி வைக்கப்பட்டன.

இந்தத் துப்பாக்கிகள் குரங்குகளைக் கொல்வதற்காக அன்றி, அவற்றைத் துன்புறுத்தாமல் விளைநிலங்களிலிருந்து விரட்டியடிப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் இந்த வனவிலங்கு – மனித மோதலுக்கு இது ஒரு தற்காலிகத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...