25 695216a3788ad
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹20 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள்: கட்டுநாயக்கவில் மோட்டார் மெக்கானிக் கைது!

Share

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டுச் சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் நபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று (17) அதிகாலை கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை 12:40 மணியளவில் சென்னையில் இருந்து வருகை தந்த விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். மத்துகம, வலல்லாவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மோட்டார் வாகன மெக்கானிக் (Motor Mechanic) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொண்டு வந்த நான்கு பயணப் பொதிகளுக்குள் (Bags) விளையாட்டுப் பொருட்கள், சேலைகள் மற்றும் சட்டைகளுக்கு நடுவே மிகவும் நுணுக்கமாகப் 12,000 சிகரெட்டுகள் அடங்கிய 60 கார்ட்டூன்கள், இந்தியத் தயாரிப்பான 23,800 பீடிகள் அடங்கிய 19 பண்டல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இவற்றின் மொத்தச் சந்தைப் பெறுமதி 20 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...